தேர்தலின் போது தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போது புதிய நடைமுறையில், 18வது சுற்றில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும். 20 சுற்றுகள் இருந்தால் 18வது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் கட்டாயமாக மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.