வயநாடு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் வைத்துள்ள தொழிலதிபர் பாபி செம்மனூர் நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த மக்கள் 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள இலவசமாக 12 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் மொத்தம் 4,833 பேர் முண்டக்கை மற்றும் சூரல்மலா, அட்டமலா ஆகிய மூன்று பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளயாகியுள்ளன.
இதுவரை இறந்தவர்களில் 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. மேலும் 500 வீடுகள் அடித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் மீதி 40 வீடுகள் மட்டுமே எஞ்சி உள்ளதென கள ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலா, முண்டக்கை, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
புதுசு புதுசா திட்டம் போடுங்க : மாநில திட்டக்குழுவுக்கு முதல்வர் அறிவுரை
இந்நிலையில் பாபி செம்மனூர் என்ற கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலத்தை இலவசமாகத் தர முன்வருவதாக அறிவித்துள்ளார். இவர் ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பி்டத்தக்கது.
வயநாட்டு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் தேயிலைத் தோட்டம், இந்தியாவிலேயே பெரிய ரெஸ்ட்டாரண்ட் , விளையாட்டு தீம் பார்க் ஆகியவற்றின் உரிமையாளர் இவர் என தெரியவந்துள்ளது. இவரது குடும்பம் தங்க வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் பாபி செம்மனூர், சவுதி அரேபியச் சிறையில் சிக்கித் தவித்து வரும் கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த அப்துல் ரஹிம் என்பவரை மீட்பதற்காக ‘யாசகா யாத்ரா’ என்ற நிதித் திரட்டும் பேரணியைத் தொடங்கி ரூ.34 கோடி நிதியைத் திரட்ட மக்களைச் சந்தித்து நன்கொடை கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இடத்தை இலவசமாகக் கொடுக்க இருப்பதாக பாபி செம்மனூர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பாபி தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் , ” இங்கே எனக்கு 1000 ஏக்கர் நிலம் உள்ளது. மொத்தம் 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக நிலங்களைக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். அந்த நிலத்தில் ஒரு சிறு பகுதிதான் இது. அதை கொடுக்க தீர்மானித்திருக்கிறேன். எங்குப் பார்த்தாலும் எல்லோரும் அழுது கொண்டு இருக்கின்றனர்.
பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை கொடுத்து உதவி செய்து வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் தங்க வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு போவார்கள்? எங்கே தங்குவார்கள்? அதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துக் கட்டிய வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆகவேதான், போச்சே ஃபேன்ஸ் என்ற எனது அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு வீடுகள் வழங்க முடிவு செய்துள்ளோம். அவர்களிடம் வீடு கட்டிக் கொள்ளப் பணம் இல்லை என்பதால் கட்டுமான செலவுக்கும் உதவ திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இது பற்றி அமைச்சரிடம் கலந்துரையாடிய போது அவரும் சில யோசனைகளை வழங்கியுள்ளர். பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலைக் தருவதாக கூறினார். நாம் உதவி செய்வது முக்கியம் இல்லை, செய்யும் உதவி சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டும்.அதுதான் முக்கியம். 100 வீடுகள் கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளோம். ஒருவேளை அதைத்தாண்டிச் தேவைப்பட்டால் கூடுதல் நிலத்தையும் தர இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.