Homeசெய்திகள்இந்தியா"இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்"- கவுதம் அதானி புகழாரம்!

“இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்”- கவுதம் அதானி புகழாரம்!

-

- Advertisement -

 

"இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்"- கவுதம் அதானி புகழாரம்!

இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள கவுதம் அதானி செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

உலக செஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சர்வதேச அளவில் முத்திரைகளைப் பதித்து வரும் பிரக்ஞானந்தா, உலக செஸ் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தார்.

இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்த உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி பாராட்டியுள்ளார். பிரக்ஞானந்தா உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கவுதம் அதானி, இளைஞர்களின் உத்வேகம் என்று புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக கவுதம் அதானி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “செஸ் உலகில் பிரக்ஞானந்தா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரக்ஞானந்தாவின் வெற்றி எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறிய கவுதம் அதானி, இந்தியாவால் என்ன செய்ய முடியும் என்பதை பிரக்ஞானந்தா பிரதிபலித்ததாகவும், அவருக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ