Homeசெய்திகள்செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.

செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.

-

செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று தினங்களின் இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ma subramanian

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள கலை அரங்கத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் 58 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மற்றும் துறை செயளர் ககண் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் படித்த 150 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்தபோது boold thinner சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின்னர் காவேரி மருத்துவமனையில் மாற்றப்பட்ட பின்னர் blood thinner சிகிச்சை நிறுத்தி கொள்ளப்பட்டது. Blood thinner சிகிச்சையை நிறுத்திய மூன்று நாட்களுக்கு பின்னர்தான் இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதற்கான மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு பணிகளை காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

senthilbalaji

செந்தில் பாலாஜியின் மனைவி விருப்பத்தின் பேரில் தான் தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். நல்ல சிகிச்சையை அரசு மருத்துவமனை வழங்கும் என்பதற்காக தனி நபர் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்த முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தமிழ்நாட்டிற்கு இதுவரை வரவில்லை. அவர்கள் வருவதற்கு எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை” என்றார்.

MUST READ