spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம்...

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

-

- Advertisement -

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாக்கு பெற்று வெற்றி அடையகூடாது என திராவிட கட்சிகள் தூண்டுதலின் நடைபெறுவதாக மாநில தொழிற்சங்க பிரிவு தலைவர் அன்பு தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார். அதில் தன்னை சீமான் காதலித்த நிலையில் இருவரும் 2008ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாகவும்  முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும், இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாகவும் இந்த நிலையில் தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே புகார் மனு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் ராமாபுரம் காவல் நிலையத்தில் 6 மணி நேரமும், மதுரவாயல் காவல் நிலையத்தில் 4 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் நேற்று காலை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதாக நடிகை விஜயலட்சுமி, அவருடன் உள்ள வீரலட்சுமி ஆகியோர் மீது நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க தலைவர் அன்பு தென்னரசு தலைமையில் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தனர். தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் விஜயலட்சுமி, வீரலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க தலைவர் அன்பு தென்னரசு கூறுகையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி மீது கலங்கம் ஏற்படுத்தவேண்டும் அவதூறு பரப்ப வேண்டும் என நடிகை விஜயலட்சுமி எண்ணி வருகிறார்.

ஆந்திராவில் இரண்டு இயக்குனர்கள் மீதும் கர்நாடகாவில் இரண்டு இயக்குனர்கள் நடிகர்கள் மீதும், இதேபோன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் புகார்களை கொடுத்துள்ளார். சீமான் 6வது நபர் இது ஒரு பிழைப்பாகவே நடிகை விஜயலட்சுமி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாக்கு பெற்று வெற்றி அடையகூடாது. மிரட்டி ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்க வேண்டும். திராவிட கட்சிகள் தூண்டுதலின் பேரில் இது நடைபெறுகிறது.

புகாரை முதலில் சொன்னபோது அவரது பின்புலத்தில் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நடிகர் இருந்தார்.   அதை நாங்கள் கண்டுபிடித்தோம். மோடி தமிழகத்தில் தேர்தலில் நின்றால், நான் எதிர்த்து நிற்பேன் என சீமான் சொன்னது இந்தியா முழுவதும் மக்களிடத்தில் பேசப்பட்டது. இதெல்லாம் திராவிட கட்சிகளுக்கு எரிச்சலை உண்டியது.

விஜயலட்சுமி பின்னால் செயல்பட திராவிட கட்சிகள் ஒரு குழுவை அமைத்துள்ளது. விஜயலட்சுமி தூண்டிவிட்டு அவரை கை பாகையாக வைத்துக் கொண்டு, நாம் தமிழர் கட்சியை களங்கப்படுத்த வேண்டும் என ஒரு திட்டமிட்ட செயலை அவர்கள் செய்கிறார்கள். இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

காவல்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு அஞ்சிதான்  நடப்பார்கள். அவர்கள் நேர்மையாக நடந்தால் இந்த புகாரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.  சீமான் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு என்பது அரசின் உந்துதன் மூலம் நடைபெறுகிறது.

ஆதாரப்பூர்வமாக எதுவுமே இல்லை. எல்லாம் அவதூறு, ஆளும் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு நாம் தமிழர் கட்சி மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும். வேறு நோக்கம் ஒன்றுமில்லை. ஆதாரமில்லாத அவதூறுகளை விஜயலட்சுமி செய்கிறார் என்று கூறினார்.

MUST READ