Homeசெய்திகள்அரசியல்நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை – அண்ணாமலை தாக்கு

-

- Advertisement -

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

வடமாநிலங்களில் வலுவாக இருக்கும் பாஜக தென்மாநிலங்களிலும் வலுவாக காலூன்ற நினைத்து இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்திருக்கிறது.

பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ,மத்திய உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தும் கூட, பாஜக பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

கர்நாடகாவில் தங்கள் ஆட்சி இருந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை கொண்டு வந்து விட வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டு இருந்த நேரத்தில், இருந்த ஒரு மாநிலமும் கைவிட்டுப் போய் இருப்பது பாஜகவை கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது .

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு, ‘’எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மைதான். பாண்டிச்சேரியில் பாஜக துணையுடன் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகா , தெலுங்கானாவில் எம்பிக்கள் உள்ளார்கள் . ஒட்டுமொத்தமாக தென் மாநிலங்களில் பாஜக இல்லை என்று சொல்லிவிட முடியாது’’ என்று கூறி இருக்கும் அண்ணாமலை ,

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

’’கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா என் மீது மிகவும் பரிவோடு இருப்பார். அவர் ஆட்சியில் 5 வருடங்கள் எஸ்பியாக பணிபுரிந்து இருக்கிறேன். அவர் மாஸ் லீடர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . ஆனால் முதல்வராக டி .கே. சிவக்குமார் வந்தாலும் சரி சித்தராமையா வந்தாலும் சரி, கர்நாடகா காங்கிரஸ் நல்ல ஆட்சியை கொடுங்கள் என்று தான் கேட்கிறேன்’’ என்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் தமிழக முதல்வரின் வாழ்த்து பதிவு குறித்து விமர்சித்திருக்கிறார். ’’ கர்நாடகாவின் புதிய ஆட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து பதிவை நானும் துலாவி பார்த்தேன். மேகதாது வேண்டாம் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளாரா என்று நானும் துலாவி பார்த்தேன். ஆனால் அதைப் பற்றி முதல்வர் வாயைத் திறக்கவே இல்லை ’’ என்று கடுமையாக சாடி இருக்கிறார்.

MUST READ