Homeசெய்திகள்அரசியல்13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

-

- Advertisement -

 

13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
அமைச்சர் எ.வ.வேலு

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலடி கொடுத்திருக்கிறார் . அதிமுக ஆட்சியில் எத்தனையோ சிறப்புகள் நடந்துள்ளன அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரா என்ற கேள்வியை இது எழுப்பி இருக்கிறார்.

13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
எடப்பாடி பழனிச்சாமி

மயிலாடுதுறையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது அமைச்சர் வேலு இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. நீங்கள்தான் எங்களுக்கு ஓட்டு போட்டீர்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அது மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனையோ இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? என்று கேட்டிருக்கும் அமைச்சர் வேலு,

ஜெயலலிதா ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது ஜெயலலிதா ஆட்சியை ராஜினாமா செய்தாரா ? எங்கள் ஆட்சியில் நடந்தது தவறுதான் . அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை . அதற்காக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தரத்துடன் பேச வேண்டும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

MUST READ