Homeசெய்திகள்அரசியல்கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!

கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!

-

- Advertisement -

”ஜெயலலிதாவையே காப்பாற்றாத நீங்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்” என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

திருவண்ணாமலையில் திமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் புகழேந்தி, ”நான் எம்எல்ஏவாக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா வந்தது. கடைசி ஒன்றரை வருடம். பெற்ற தாய் இறந்தால் மகன் கொல்லி வைக்க முடியவில்லை. கணவன் இறந்தால் பொண்டாட்டி முகத்தில் முழிக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனை பார்க்க முடியவில்லை. அப்போது, அதிமுக ஆட்சி. எடுபுடி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். எந்த எடுபிடி பழனிச்சாமி முதலமைச்சர் தெரியுமா?

அப்போது அதிமுக எம்எல்ஏவாக சட்டசபையில் நான் இருந்தேன். ஜெயலலிதாவை முதலமைச்சராக சட்டசபையில் பார்த்தவன். நான் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்தவன் நான். ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்தவன் நான். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் தலைவர் கலைஞர் நம்மை விட்டு பிரிந்தார். 96 வயது. மூப்பு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால் ஆபரேஷன் செய்து தொண்டையில் குழாய் வைத்தார்கள். வீட்டில் வைத்திருந்த கலைஞரை யார் வேண்டுமானாலும் போய் பார்த்தோம். இறந்துவிட்டார். கலைஞருக்கு வயது மூப்பு.

உங்கள் தலைவி ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் வைத்திருந்தீர்களே… யாராவது போய் பார்க்க முடிந்ததா? காப்பாற்றாமல் போனது இருக்கட்டும். எவனாவது பார்த்தீர்களா? உள்ளே என்ன நடந்தது என்று சொன்னீர்களா? 100 நாட்களாக அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உள்ளே இருந்தார். அவரைப் பார்க்க ராகுல் காந்தி வந்தார். உள்ளே போய் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பார்த்தீர்களா என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டார்கள். பார்த்தேன் என்றார். யாரை பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள் ‘பார்த்ததாக சொன்னவர்களை பார்த்தோம்’ என்றார்.

கவர்னர் உள்ளே போய்விட்டு வெளியே வந்தார். பார்த்தீர்களா என்று கேட்டார்கள். பார்த்தேன் என்றார். யாரை பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். ‘பார்த்ததாக சொன்னவர்களை பார்த்தோம்’ என்றார். வெங்கையா நாயுடு உள்ளே போய்விட்டு வெளியே வந்தார். பார்த்தீர்களா? என்று கேட்டார்கள். யாரைப் பார்த்தீர்கள்? ”பார்த்ததாக சொன்னவர்களை பார்த்தோம்” என்றார்.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அப்போது. அரசியல் நாகரிகம் கருதி இவர் போய் பார்த்துவிட்டு வந்தார். பார்த்தீர்களா? என்று கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் நாங்கள் தவறாக சொல்ல முடியுமா? தளபதியே சொன்னார். பார்த்தேன் என்றார். யாரை பார்த்தீர்கள்? என்றார்கள் ”பார்த்ததாக சொன்னவர்களைப் பார்த்தேன் என்றார். 100 நாள் ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாமல், எப்படி செத்தார் என்று இதுவரை தெரியவில்லை. ஜெயலலிதாவையே காப்பாற்றாத நீங்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்” என பேசினார்.

MUST READ