நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கம் செய்து வரும் மக்கள் நலத்திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வரக்கூடிய நிலையில் 2026லும் இந்த ஆட்சியே தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சர்.பிட்டி தியாகராயர் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தவர் நீதிக் கட்சி தியாகராயர். மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தியவர். பின்னர் காமராஜர், பேரறிஞர் திட்டத்தை விரிவுபடுத்தினர். அதோடு கலைஞரும், எம்.ஜி ஆரும் தொடர்ந்தனர் என்றார்.
பகல்ஹாம் தாக்குதல் குறித்த நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத் தொடர் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இருக்கும் என நினைப்பதாக தெரிவித்தார். நீதிக் கட்சி, திராவிட கொள்கைகள் உருவாக்கிய திட்டங்கள் இன்றளவும் வழிகாட்டும் திட்டங்களாக இருக்கிறது. அதன் வழியில் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய நல்லாட்சி தரும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. இவ்வாறான மகத்தான ஆட்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்து கொண்டு வருகிறார். 2026லும் திராவிட மாடல் ஆட்சி திமுக ஆட்சி தான் தொடரும் என்று உறுதியாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து மதிமுக நிர்வாகிகளுடன் மாமன்ற அரங்கத்தை பார்வையிட்டதோடு உறுப்பினர்களின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது என்னை கவுன்சிலர் ஆக்க பாக்றீங்களா என நிர்வாகிகளிடம் வைகோ கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!