Homeசெய்திகள்அரசியல்மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும்போது நீட் தேர்வு மறையும்- திருச்சி சிவா

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும்போது நீட் தேர்வு மறையும்- திருச்சி சிவா

-

- Advertisement -

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும்போது நீட் தேர்வு மறையும்- திருச்சி சிவா

இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இங்கிருக்கும் நிறுவனங்களிலும் புதிதாக திறக்கப்படும் விடுதிகளிலும் பணியாளர்களாக மட்டுமே இருப்பதாகவும் தமிழை உயிராகவும் ஆங்கிலத்தை துணையாகவும் கொண்டிருப்பவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கோவை திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் தண்டனை - திருச்சி சிவா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது பேசிய திருச்சி சிவா, “தற்போது வெளியாகும் திரைப்படங்கள் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானால் இந்த வாரம் மக்களுக்கு மறந்து போகிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தில் வெளியான திரைப்படங்கள் இன்றளவும் மனதில் நிற்கிறது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இந்த மண்ணில் பிறக்கவில்லை என்றால் நாம் எப்படி இருந்திருப்போம் என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு கல்விச்சாலைகள் தமிழகத்தில் வந்திருக்கிறது என்றால் அதற்கு அவர்கள் தான் காரணம்.

பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற முழக்கம் அவர்கள் மூலமாகவே கேட்கப்பட்டது. அதன் காரணமாகவே இன்று பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். தமிழகத்தில் நிகழ்வது போல் பட்டிமன்றங்களோ கவியரங்கங்களோ வேறு மாநிலங்களில் நடைபெறுவதில்லை. பொதுக்கூட்டங்கள் கூட அவசியத்தின்பால் மட்டுமே பிற மாநிலங்களில் நடக்கும் நிலையில் தமிழகத்தின் வீதிகளில் நாள் எங்கும் பொதுக்கூட்டங்கள், பட்டிமன்றங்கள் போன்றவை நடைபெற்று வருகிறது, இந்தி மொழி உருவாகி 250 முதல் 300 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த மூத்த மொழி தமிழ் மொழி.

ஜாதிக்காக மருமகளை வெறுக்கவில்லை... திருச்சி சிவா சொல்லும் பகீர் காரணம்!

நான் 20 ஆண்டுகள் டெல்லியில் இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளை தவிர இதுவரை இந்தி படிக்கவில்லை. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் மறைந்து போய்விட்ட சூழலில் தமிழகத்தில் மட்டும்தான் இந்தி மொழி நுழைய முடியவில்லை. சந்திராயன் செயற்கைக்கோள் நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனை உருவாக்கியவர்கள் தமிழர்கள். இந்த சோதனைக்கு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் இருப்பவர்களும் தமிழர்கள் தான். டெல்லியில் முக்கிய துறைகளில் முக்கிய நுட்பமான பொறுப்புகளில் இருப்பவர்களும் தமிழர்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களிலும் புதிதாக திறக்கப்படும் விடுதிகளிலும் பணியாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் தமிழை உயிராகவும் ஆங்கிலத்தை துணையாகவும் கொண்டிருக்கும் நாம் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் தமிழகத்தில் இந்தி இல்லை என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறோம். திமுகவை ஒரு சில கட்சிகள் எதிர்க்கிறார்கள் ஆனால் மதிக்கிறார்கள், ஒன்றியத்தில் ஆளும் இந்த ஆட்சி மாறி இந்தியா கூட்டணி ஆட்சி மலரும் பொழுது நீட் மறையும், கட்சத் தீவும் மீட்கப்படும்” என்றார்.

MUST READ