செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் – நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் சாடல்.
செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக பிரம்மதேசம் போலீசில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்
அக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் மேடையில் பேசும்போது ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய சீமான் ராஜேந்திர சோழனின் வரலாற்றை பேசுவதை விட்டு இப்பகுதியில் நாம் தமிழர் கொடியை ஏற்ற மறுக்கும் நீங்கள் விஜயகாந்த், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் கட்சி கொடியை ஏற்றும்போது எங்கே சென்றீர்கள் என்று மேடையில் பேசினார்.
அப்போது பாமகவினருக்கும் சீமானுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் சீமான் கொடி ஏற்றாமல் திரும்பிச் சென்றார். பின்னர் பிரம்ம சேதம் பகுதியை சேர்ந்த பாமகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பிரம்ம சேதம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்யார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர் அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளருக்கு சீமான் அளித்த பேட்டியில் : தவேக கட்சியின் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் சாடல் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பிரச்சனையோடு, கண்ணீரோடு, கவலையோடு நிற்கின்ற எல்லா மக்களோடும் கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறேன். தனித்துப் போட்டியிடவில்லை தமிழர்களை நம்பி, இயக்கங்களை நம்பி அல்ல தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறேன் என பல்வேறு கருத்துகளை கூறினார்.