Homeசெய்திகள்அரசியல்விஜய்யின் வருகையினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை- செல்வப் பெருந்தகை

விஜய்யின் வருகையினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை- செல்வப் பெருந்தகை

-

- Advertisement -

விஜய் அரசியல் வருகையினால் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வருகையினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை- செல்வப் பெருந்தகை

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, வெள்ளிக்கிழமை மாலை முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழைமை வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம் என்றார்.

இதில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வருகிற 5 ஆம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறோம் என்றார். இந்த பணிகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முடியும். அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம். எங்கள் தலைவர் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுங்கள் என்று ஆலோசனை சொன்னதாக அவர் கூறினார்.

த.வெ.க தலைவர் விஜயின், அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. யார் சலனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு விஜய் வருகை சலசலப்பை உருவாக்கி இருக்கலாம். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

இதே போல விஜயின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு விஜயின் அரசியல் பயணம் லபகராமக இருக்கும் என்றார்.

தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்றார். தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும்.

ஒருபோதும் ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு அதிபர் இது எல்லாம் இந்தியாவில் வாய்ப்பே இல்லை. இதை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். சீனாவைப் போன்று ஒரு அதிபர் கொண்டு வர வேண்டும் என பாஜக முயல்கிறது. இது போன்ற முயற்சியை பாஜக முன்னெடுத்தால் சிவில் போர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கட்சி வலிமையாக, கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும். தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு என்ற விவாதம் எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறிய அவர் எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான் என்றார். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைப்பதற்கு, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்தார். எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

ரூ.22 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு

MUST READ