
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!
தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்தது. பின்னர், விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவரில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் வீரர் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுச் செய்தார். அதேபோல், இந்திய அணியின் வீரர்கள் திலக் வர்மா 52 ரன்களையும், ரிங்கு சிங் 38 ரன்களையும், ரஜத் படிதார் 22 ரன்களையும், கேப்டன் ராகுல் 21 ரன்களையும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டோனி டெ சோர்ஸி 81 ரன்களையும், கேப்டன் மார்க்ரம் 36 ரன்களையும், க்ளாசென் 21 ரன்களையும் எடுத்தனர்.
தள்ளிப்போகிறதா ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பட ரிலீஸ்?
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் 4, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.