spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரணி அருகேயுள்ள அடையபுலம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்த குப்பன் -அஞ்சலி தம்பதிருக்கு மோகன்ராஜ் என்ற மகனும், வர்ஷா (8) என்ற மகளும் உள்ளனர். நேற்று மோகன்ராஜ், வர்ஷா ஆகியோர், அதே பகுதியை தங்களது உறவினர் விநாயகத்தின் பிள்ளைகளான கார்த்திகா (8), தனுஷ்கா ஆகியோருடன் ஓடைதாங்கல் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேரும் நீரில் முழ்கினர்.

we-r-hiring
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
 

ஏரிக்கரையில் சிறுவர்களின் உடைகள் மட்டும் கிடப்பதை கண்டு சந்தேகமடைந்த அந்த பகுதி இளைஞர்கள் ஏரியில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது, மோகன்ராஜ்,வர்ஷா, கார்த்திகா மற்றும் தனுஷ்கா ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ