spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை -  ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை –  ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

we-r-hiring

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்பவர் போலிசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

MUST READ