Homeசெய்திகள்தமிழ்நாடு+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

+2 பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கும், மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று (மார்ச் 01) எழுத உள்ள மாணவர்களுக்கும், மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…

பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ