Homeசெய்திகள்தமிழ்நாடு6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு

6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு

-

- Advertisement -

தமிழ் நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்கள் குறித்து பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வலைத்தளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

MUST READ