spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!

-

- Advertisement -

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!

சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குதிரை

இந்த சம்பவம் அடங்குவதற்குள் கடலூரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 15). கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி முடிந்ததும், லோகேஷ்வரன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அப்போது அவன், சில்வர் பீச்சில் சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்ற போது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது. இதில் பதறிய அவன் அங்கிருந்து ஓட தொடங்கினான்.

we-r-hiring

இருப்பினும் அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று அவனை கடித்ததுடன், காலால் உதைத்துள்ளது. மேலும் சில்வர் பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருந்த தேவனாம்பட்டினத்தை சேர்ந்த பத்மாவதி(60) என்பவரையும் குதிரை கடித்து விட்டு, தேவனாம்பட்டினம் ஊருக்குள் ஓடியது. இதில் லோகேஷ்வரன், பத்மாவதி, தேன்மொழி ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து

இதற்கிடையே தேவனாம்பட்டினம் போலீசார், குதிரையின் உரிமையாளர் உதவியுடன் அந்த குதிரையை பிடிக்கும் முயற்சி செய்தனர். அப்போது குதிரை வேகமாக ஓடிய போது பொதுமக்களும் துரத்திக் கொண்டே சென்றனர். எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு பள்ளத்தில் குதிரை தடுமாறி விழுந்தது. பின்னர் அந்த குதிரையை இழுத்து மேலே கட்டிப் போட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த குதிரை ரத்தம் கக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ