Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Photo: TN Govt

தமிழ்நாடு சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (அக்.11) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ப்பதற்கான மசோதாவை, தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். கடந்த அக்டோபர் 09- ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த கூட்டத்தொடரில், காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ