
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போரால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இஸ்ரேல் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தற்போது நிலவும் சூழல் குறித்து தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா வலுவாக எதிர்க்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!
அதேபோல், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல் கூறுகின்றன.