Homeசெய்திகள்தமிழ்நாடு"அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்"- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

“அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்”- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

-

 

"அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்"- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி – கமல்?

சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., “பா.ஜ.க. தமிழகத்தில் வர முடியாது என்று பா.ஜ.க.விற்கே தெரியும். அதனால் தான் அ.தி.மு.க.வே வரட்டும் என அ.தி.மு.க. தலைவர்களை குறிப்பிட்டு பிரதமர் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டுவர வேண்டும் என வலயுறுத்தி வருகிறோம்.

SC, ST மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருந்துதோம். அதேபோன்று சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் எதிர்பார்த்த கருத்துகள் அதில் இல்லை. அதிக இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்றத்தில் கருத்துகளைச் சொல்ல முன் வந்தால் அதை நிறுத்துவதிலேயே சபாநாயகர் குறியாக இருக்கிறார். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் அவர்களுக்கு அதிக நேரம் கொடுக்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் பலர் கூட்டணியை விட்டு விலகி செல்கின்றனர். கூட்டணியைச் சமாளிக்க முடியாமல் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் திணறி கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. தற்போது உள்ள கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்றால் அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து தேர்தலில் வெற்றி வாகை சூடும்.

மலையாள நட்சத்திரத்துடன் இணையும் சமந்தா?

புரட்சி பாரதம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மூன்று தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட இருக்கிறோம். திருவள்ளூர் தொகுதி வேண்டும் என அழுத்தமாகக் கேட்டுள்ளோம். தி.மு.க. மீது மட்டுமல்ல பா.ஜ.க.வின் மீதும் தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வு இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

MUST READ