நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் மாநில, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சமூக வலைதள செயல்பாடுகள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
வேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “சமூக வலைதளங்களில் செயல்படும் அ.தி.மு.க.வினர் தரக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம். பிற கட்சிகளின் ஐ.டி. விங் போல் வெறுப்பை உண்டாக்கினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், தி.மு.க. அரசின் தவறுகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.