
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லையென அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறிய நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”- சீமான் ட்வீட்!
சென்னை பனையூரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்திற்கு பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். மேலும், மாநில மூத்த நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாகவும் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாவிட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
இன்று (செப்.19) பொள்ளாச்சியில் யாத்திரையைத் தொடங்கும் அண்ணாமலை, கூட்டணி நிலைப்பாடு குறித்து தொண்டர்களிடம் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு வந்த சில நாட்களிலேயே, தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!
அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றிய அ.தி.மு.க., இறுதியாக தங்கள் கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்றும் கூறிவிட்டது.