Homeசெய்திகள்தமிழ்நாடுபாரா ஆசிய விளையாட்டு- தமிழக வீரருக்கு வெள்ளி!

பாரா ஆசிய விளையாட்டு- தமிழக வீரருக்கு வெள்ளி!

-

 

பாரா ஆசிய விளையாட்டு- தமிழக வீரருக்கு வெள்ளி!
File Photo

தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!

4- வது ஆசிய பாரா போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று (அக்.22) தொடங்கியது. வரும் அக்டோபர் 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பாரா போட்டியில், இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (அக்.23) நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சைலேஷ் குமார் தங்கம் பதக்கமும், ராம் சிங் வெண்கல பதக்கமும் வென்றனர். அதேபோல், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியம்மன் தங்கவேலு, உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்று பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு

அதேபோல், மகளிருக்கான படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் சென்றுள்ளார்.

வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

MUST READ