Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடி அருகே பரபரப்பு சம்பவம்! போலீசாரின் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

ஆவடி அருகே பரபரப்பு சம்பவம்! போலீசாரின் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களின் இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் சந்திரசேகர், கணேசன் ஆகிய இருவரும்
நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த போது இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லோடு வண்டியை மடக்கியபோது, வாகனம் நிறுத்தாமல் வாகனத்தை வேகமாக இயக்கிச்சென்றதால் காவலர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தைக் கொண்டு அந்த வாகனத்தை பின்தொடர்ந்தனர். வெகுதூரம் சென்று வெளிவட்ட சாலை அருகே வாகனம் காவல்துறையினரால் மடக்கி நிறுத்தப்பட்டது. அதில் இருந்து இறங்கிய இருவர் பட்டா கத்தியை காட்டி மிரட்டி லாரியை விட்டு, விட்டு காவலர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.


இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் விட்டுச் சென்ற சரக்கு வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்தனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை பொதுமக்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குறித்து அவர்கள் கொண்டு வந்த வாகனத்தை வைத்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ