Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்ற பெண் நீர்யானை!

வண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்ற பெண் நீர்யானை!

-

- Advertisement -

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பெண் நீர்யானை குட்டி ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான், நீர் யானை உள்ளிட்ட பல்வேறு அரிய வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்பூங்காவில் பிரகுர்தி என்ற பெண் நீர் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 8 மாத கர்ப்பமாக இருந்து வந்த இந்த நீர் யானை இன்று பிரசவத்தில் அழகிய குட்டியை ஈன்றுள்ளதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது, இதன் தந்தை லட்சுமணன் என்ற நீர்யாணை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

hipo

தண்ணீரில் குட்டியை பிரசவித்த நீர் யானை குட்டியுடன் தண்ணீரை விட்டு வெளியேறாமல் இருந்து வருகிறது. இதனால் குட்டியின் பாலினத்தை அறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள வண்டலூர் பூங்கா நிர்வாகம், தாய் நீர்யானைக்கு தேவையான ஊட்டசத்து மிகுந்த உணவு வகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான நீர்யானை குட்டி ஈன்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ