Homeசெய்திகள்தமிழ்நாடுஓடும் பேருந்தில் 6 சவரன் நகை திருடிய இரு பெண்கள்!

ஓடும் பேருந்தில் 6 சவரன் நகை திருடிய இரு பெண்கள்!

-

 

ஓடும் பேருந்தில் 6 சவரன் நகை திருடிய இரு பெண்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் ஓடும் பேருந்தில் திருடிய தங்க நகைகளை இரண்டு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

பெங்களூருவை நோக்கி அரசுப் பேருந்துச் சென்றுக் கொண்டிருந்த போது, மத்தூருக்கு அருகே பேருந்தில் ஏறிய 2 பெண்கள் சில்லறை எடுப்பது போல பாவனை செய்து சத்யா என்ற பெண்ணிடம் ஆறு சவரன் தங்க நகைகளை கையோடு திருடிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில், தங்க நகைகளைத் திருடிய இரண்டு பெண்களும் பேருந்தில் ஏறி பயணித்தது தெரிய வந்தது.

பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

சாம்பல்பட்டிக்கு அருகே அந்த பேருந்தை நிறுத்தி இரு பெண்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர்.

MUST READ