Homeசெய்திகள்தமிழ்நாடுபல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

-

- Advertisement -

பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

பல் பிடுங்கி பல்வீர் சிங் சஸ்பெண்ட் பின்னணி என்ன?| What is the background  behind Bal Pitungi Balveer Singh Suspend? | Dinamalar

நெல்லையில் காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், 18.6 லட்ச ரூபாய் மதிப்புடைய 118 செல்போனைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பை காவல்நிலையத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பல்புடுங்கி சித்தரவதை செய்த விவகாரம் புலன் விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக பேசினால் விசாரணை பாதிக்கும் என்றார். மேலும் இது சம்பந்தமாக பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட எல்லா காவல்நிலையங்களிலும்சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

MUST READ