spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு’கண்முன்னே 3 மரணங்கள்’ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இளைஞர் சாதனை

’கண்முன்னே 3 மரணங்கள்’ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இளைஞர் சாதனை

-

- Advertisement -

’கண்முன்னே 3 மரணங்கள்’ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இளைஞர் சாதனை

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பியுள்ளர்.

City man scales Mt Everest, second from Tamil Nadu

சென்னை அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. அலைச்சலுக்கு வீரனான இவர் அலை சரக்கு போட்டிகளில் சில பரிசுகளையும் வென்றுள்ளார். மீனவ இளைஞர்கள் அலைச்சருக்கு செய்வது எளிமையானது தான் என மற்றவர்கள் சொல்வதைக் கேட்ட ராஜசேகர் கடினமான ஒரு விஷயத்தை செய்து சாதனையாக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதன்படி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய வேண்டும் என முடிவெடுத்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஒன்பது மாதங்கள் பயிற்சி பெற்று 19ஆம் தேதி அன்று எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

we-r-hiring

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை தொட்டு சென்னை கோவலத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை முத்துவை, அவருடைய ஊர்மக்கள் சென்னை விமான நிலையத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர் பச்சை, “எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு முதல் தடையாக பணம்தான் இருந்தது ஒரு சிலரின் உதவியோடு ஒன்பது மாதங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். கடலில் விளையாடும் பொழுது வீட்டில் இருப்பவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால் மழையில் ஏற போகிறேன் என்று சொன்னவுடன் முதலில் எதிர்ப்பு வந்தது. பின்னர் தன்னம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். எவரெஸ்ட் மலையில் ஏறும்போது கண் முன்னே மூன்று மரணங்கள் நிகழ்ந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன் ஆனாலும் எப்படியாவது ஏறிட வேண்டும் என தன்னம்பிக்கையோடு நடந்து சென்றேன்.

Image

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து எனது நண்பர்களுக்காக சில கற்களை கொண்டுவந்துள்ளேன். வீட்டுக்கு வந்ததும் முதலில் என் அம்மா சமைத்த மீன் குழம்பு சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்துள்ளேன். தன்னம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக நாம் நினைத்ததை முடிக்க முடியும்” என்றார்.

MUST READ