Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்துப் பெற்ற செல்வப்பெருந்தகை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்துப் பெற்ற செல்வப்பெருந்தகை!

-

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்துப் பெற்ற செல்வப்பெருந்தகை!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.19) நண்பகல் 12.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ் மாநில அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு-தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம், தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி மற்றும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினார்.

பிரபல பாலிவுட் பாடலாசிரியருக்கு ஞானபீட விருது அறிவிப்பு

அதேபோல், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை, சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமாரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

MUST READ