Homeசெய்திகள்தமிழ்நாடுபெரும் சோகம்!...வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி!

பெரும் சோகம்!…வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி!

-

தேனி மாவட்டம் போடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே சிவமலையை சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், அவர் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். இவரது மகள் சந்தியா தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இதனால் அவரது வீட்டின் சுவர் சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனடியாக வீட்டிவிட்டு வெளியேறும்படி எச்சரித்துள்ளனர். ஆனால் வேறு எங்கும் செல்ல மனமில்லாத புஷ்பம் தனது மகளுடன் அதே வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழந்தது. இதில் சந்தியா படுகாயம் அடைந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் தாய் புஷ்பா லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ