Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூரில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருப்பூரில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

-

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தவாசன் காங்கேயத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி சென்றார்.

நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய ஆட்டோ மீது வாலிபர் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக, ஆட்டோ சாலை பிரிவில் மெதுவாக திரும்புவதும், அப்போது மின்னல் வேகத்தில் பைக் மோதும் காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ