Homeசெய்திகள்தமிழ்நாடு5 மாநில தேர்தலால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- செல்வப்பெருந்தகை

5 மாநில தேர்தலால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- செல்வப்பெருந்தகை

-

5 மாநில தேர்தலால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- செல்வப்பெருந்தகை

5 மாநில தேர்தலை மனதில் வைத்து கேஸ் சிலிண்டர் விலை குறைத்திருப்பது பிரதமர் மோடியின் விளையாட்டு என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை மனதில் வைத்து சிலிண்டர் விலை 200 ரூபாயை மோடி குறைத்துள்ளார். ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு 5 மாநில தேர்தல் வரும்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டன. அப்போது தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் 450 ரூபாய் சிலிண்டர் விற்கப்பட்டது, தற்போது மோடி ஆட்சியில் 1000 ரூபாய்க்கு மேலாக கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது. அரசியலுக்காக, தேர்தலுக்காக கேஸ் சிலிண்டர் விலையை மோடி குறைத்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னர் கேஸ் சிலிண்டர் விலையை மோடி ஏற்றி விடுவார். கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தி வைத்திருப்பது மோடி நண்பர்களான அதானி,அம்பானி, நன்மை அடைவதற்காகவே” என்றார்.

MUST READ