
கொடைக்கானலில் வீடுக்கட்டும் தன்னை மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுவதாக நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறைப் பகுதியில் தந்தைக் குடியிருந்த வீட்டைப் புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமானப் பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தெரிகிறது.
ஆனால் வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் ஜமீர் தன்னை ஏமாற்றி விட்டதாக பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பாபி சிம்ஹா, “கொடைக்கானலில் வீடுக்கட்டும் தன்னை, சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிலர் மிரட்டுகின்றனர். அனைவராலும் அறியப்பட்ட நடிகரான தனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மகேந்திரன் என்பவர் தன்னை மிரட்டுகிறார்.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!
தனது வீட்டிற்கு பட்டா இல்லை என்று வதந்திப் பரப்புவதை சட்டப்படி எதிர்கொள்வேன்; 30 ஆண்டுகளாக கொடைக்கானலில் குடியிருந்து வருகிறேன். சமூக ஆர்வலர்கள் என்று கூறுபவர்கள் 30 ஆண்டுகளாக எங்கே போனார்கள்?” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.