Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் நகை பெட்டி தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!

கோவையில் நகை பெட்டி தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!

-

- Advertisement -

கோவையில் நகை பெட்டி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

கோவை மதுக்கரை பகுதியில் நகை பெட்டி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அந்த குடோனில் திடீர் தீ விபத்து எற்பட்டது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி அந்த தீயை அணைக்க முயன்ற நிலையில், அவர்களால தீயை அணைக்க முடியவில்லை. குடோனில் சமயலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரும் இருந்ததால் தீ அதிகளவில் பரவியது. இதனை தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இந்த தீ அருகே இருந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. இதனை அடுத்து தீ விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ