
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வரும் டிசம்பர் 26- ஆம் தேதி செல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டிசம்பர் 21 இல் நடைபெற இருந்த ‘லால் சலாம்’ ஆடியோ லான்ச் என்னாச்சு?
கனமழை, வெள்ளத்தால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தூத்துக்குடியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கால்நடைகள் வெள்ளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. லட்சக்கணக்கான பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுமையாக ஸ்தம்பித்தது.
மக்கள் செய்வதறியாது தவித்து வந்த நிலையில், மழை, வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வுச் செய்ததுடன், நிவாரணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
சூர்யாவின் ‘புறநானூறு’…..ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இந்த சூழலில், மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்வதற்காக, வரும் டிசம்பர் 26- ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு செல்கிறார். நேரில் ஆய்வு செய்ய வரவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், தூத்துக்குடிக்கு செல்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஆய்வு பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் மத்திய நிதியமைச்சர், பின்னர் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு தொகையை விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.