Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி நிறைவு!

ஆவடியில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி நிறைவு!

-

 

ஆவடியில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி நிறைவு!
Photo: Defence Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ.) சார்பில், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, தளவாடங்களின் கண்காட்சி, கடந்த ஜூலை 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜூலை 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!

இந்த கண்காட்சியை சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சி.வி.ஆர்.டி.இ. விஞ்ஞானிகள் தொழில்நுட்ப ஊழியர்களுடன் கலந்துரையாடினர்.

ஆவடியில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி நிறைவு!
File Photo

பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆவடி தொழிற்சாலையில், ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ