Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் முன்னால்...

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டு 

-

- Advertisement -

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழக்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டு 

திமுகவின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:  அம்பேத்கர் திட்டம் முடக்கம்: திமுக ஆட்சிக் காலத்தில் எவ்விதத் தொய்வும் இன்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ‘அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்’, தவெக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு தாமதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மாணவர் பாரதிதாசன் பாதிப்பு: மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (National University of Malaysia) திசுப்பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் (Tissue Engineering and Regeneration) படிப்பைப் பயின்று வரும் பாரதிதாசன் என்ற பட்டியலின மாணவருக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவியை வழங்காமல் தவெக அரசு இழுத்தடித்து வருகிறது.

பட்டியலின மாணவர்களின் எதிர்காலம்: தவெக ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் இருந்தும், உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவரின் படிப்பைத் தொடர முடியாத சூழலை அரசு உருவாக்கியிருப்பது அவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.நிதி தாமதத்தால் அயல்நாட்டில் உயர்கல்வி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்

MUST READ