spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

-

- Advertisement -

கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட மேலாத்தூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதி தலைவர் நிலா கண்ணன் மீது திமுகவினர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Alangudi, Pudukkottai : ஆலங்குடி: ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி  தஞ்சம் | Public App

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரைச் சேர்ந்தவர் நிலாகண்ணன் (எ) கணேஷ்குமார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதி தலைவராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவலை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இதைப்பார்த்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமலாதிராஜன் உள்ளிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நிலாகண்ணன் (எ) கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

MUST READ