Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்! 

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்! 

-

 

வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!
File Photo
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.17) வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாலத்தீவுப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜன.18) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 19- ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் (ஜன.17), நாளையும் (ஜன.18) உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ