- Advertisement -
தமிழகத்தில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் பணி காலம் முடியவடையவுள்ளது. இந்நிலையில் மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
