வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கினால் தவறானவர்கள் பயனடைவார்கள்; எனவே, வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.15) காலை 11.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 37 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6,000 மக்களுக்கு வழங்கப்படும்” என்று வாதிட்டார்.
அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???
இதையடுத்து, வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாகவே வழங்கலாம் எனத் தெரிவித்து, அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், வெள்ள நிவாரணம் உடனடி தேவை; அதைத் தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளது. நிவாரணம் தகுதியானோருக்கு செல்வதை உறுதிச் செய்யவும், நிவாரணம் வழங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.