Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் ஆவடி நாசரின் காணொளியைப் பகிர்ந்த அமைச்சர் உதயநிதி!

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரின் காணொளியைப் பகிர்ந்த அமைச்சர் உதயநிதி!

-

 

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரின் காணொளியைப் பகிர்ந்த அமைச்சர் உதயநிதி!

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன.21) தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிறப்புரையாற்றவிருக்கிறார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25ல் வீரவணக்கம் செலுத்திடுவோம் – டிடிவி தினகரன்

மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் மாவட்டத்தில் குவிந்து வருகின்றனர். அதேபோல், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் சேலம் மாவட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.நாசர், காணொளியை பகிர்ந்துள்ளார்.

தி.மு.க.வின் ஈட்டி முனையாகத் திகழும் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள நிலையில், இளைஞர் அணி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த அனைத்து வித போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றைக்குத் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வரும் இளைஞர் அணியின் 30 ஆண்டுக் கால பயணத்தை அந்த காணொளியில் பகிர்ந்துள்ளார்.

காணொளியில் ஆவடி நாசர் எம்.எல்.ஏ. கூறியதாவது, “மாநில கட்சிகளில் முதன்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது தி.மு.க.வில் தான். கடந்த 1990- ஆம் ஆண்டு தி.மு.க.வின் 6-வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் இளைஞரணி சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

இந்த காணொளியை ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆவடி நாசருக்கு
என் அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ