Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

-

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வுற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,610க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.52,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 88.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.88,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குபவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

MUST READ