Homeசெய்திகள்தமிழ்நாடுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு - இல்லத்தரசிகள் சற்று நிம்மதி!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு – இல்லத்தரசிகள் சற்று நிம்மதி!

-

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ,54,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,730க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

MUST READ