கலைஞர் தன் வாழ்நாளில் சலிப்பு தன்மையை அறியாதவர் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “கலைஞர் நூற்றாண்டு நாள்குறிப்பு” வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்..
நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது; இந்த நாள்குறிப்பு கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது, அதுவும் பயனுள்ள வகையில் உள்ளது. எது செய்தாலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புபவர் கலைஞர் கருணாநிதி. அந்த வகையில் இந்த நாள்குறிப்பு அமைந்துள்ளது மிக சிறப்பானது. 1996-ல் சட்டமன்ற உறுப்பினரானேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ முகாமை நடத்தினோம், பின்னாலில் அது வருமுன் காப்போம் திட்டமானது. தற்போது கலைஞர் வருமுன் காப்போம் திட்டமாக இருக்கிறது.
அதைப்போல,இந்த கலைஞர் நாள்குறிப்பு தொடங்கும் போது சிறியதாக தான் இருக்கும் பிறகு தான் பெரிய பொறியாக மாறும். திராவிட இயக்க வரலாறுகளை அடுத்த தலைமுறைக்காக எடுத்துச்செல்லுங்கள் என்றார்.
காசு.நாகராசன் – நாட்குறிப்பு எழுதியவர்.
நெஞ்சுக்கு நீதியில் தொடங்கி பல்வேறு புத்தகத்தில் இருந்து இந்த ஆய்வுகளை மேற்க்கொண்டு இந்த கலைஞர் நாட்குறிப்பை எழுதி உள்ளோம்.
கோவை மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு பொறுப்பாளராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இணைந்து இளைய தலைமுறைகளுக்கு திராவிட வரலாறு தெரியவதில்லை, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வேலையை செய்துள்ளோம்.
இன்றைக்கு சமூக தேவையாக திராவிடம் இருக்கிறது. குறைந்தபட்ச வேளையாக தான் இந்த கலைஞர் நாட்குறிப்பை கொண்டு வந்துள்ளோம். இது வெறும் 1 சதவீதம் தான்.
இளைஞர்களுக்கு திராவிட இயக்க வரலாற்றை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலைஞர் நாட்குறிப்பு பணியை எங்களுக்கு தொடங்கி வைத்தது அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.
திராவிட இயக்க வரலாறு நமக்கானது அல்ல அடுத்த தலைமுறைக்கானது அதனை கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்வோம் என்றார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேடை பேச்சு :-
இந்த கலைஞர் நாள்குறிப்பை பார்க்கும்போது தமிழ்நாட்டில் தான் திருநங்கைகளுக்கு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இது யாருக்காவது தெரியுமா? திருநங்கைக்கு aud 24 -2007- ல் குடும்ப அட்டை வழங்கியதை இந்த நாள்குறிப்பில் அமைந்துள்ளது.
டிசம்பர் 6 என்ன இருக்கிறது என பார்தத்தேன் அண்ணல் அம்பேத்கர் இறந்த நாள், மசூதி இடிக்கப்பட்ட நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கலைஞர் நாள்குறிப்பு முற்றுப்பெறாத தேடல் முடிவுறாத காதல் என்றார்.
கலைஞர் நாள்குறிப்பில் பெரிய வேறுபாடு என்னவென்றால் சூன் மாதம் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு அடையாளம் அழுத்தம். 1942 ஆகஸ்ட் மாதம் முரசொலி தொடங்கினார்.முதல் இதழில் பெரியார் ஆண்டு 63 என கலைஞர் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
கலைஞரை போல துயரப்பட்டவர் யாவரும் இல்லை. 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். அவர் பிறப்பில் இருந்து ஆண்டு கணக்கிடப்பட்டு இந்த நாள் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் உறுதியாக 75 ஆண்டுகள் உள்ள கழகம் திமுக தான். மூன்று முறை கட்சி பிளந்திருக்கிறது. நெருக்கடி நிலை காலத்தை சந்தித்திருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி திமுக கழகம் இருப்பதற்கான காரணம் கலைஞர் கருணாநிதி தான். கலைஞரின் சிறப்பு என்னவென்றால் அவருடைய சலிக்காத மனம் தான். அவர் கடைசி வரைக்கும் சலிக்காத தன்மை உள்ளவர். இறுதி வயதிலும் அவருக்கு சலிப்பே வரவில்லை. கலைஞர் நாட்குறிப்பை கையில் வைத்துக்கொள்வது என்பது சலிக்காத தன்மையை வைத்துக் கொள்ளவது என்பதாகும். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசினார்.