spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்கள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் 11 வருவாய் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த ஜுன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தினர். இவர்களில் பலரின் உடல்நிலையில் கண் எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 66 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

MUST READ