spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

-

- Advertisement -

காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலத்திலுள்ள உள்ள அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையினை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குற்றாலத்திலுள்ள அனைத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்த நிலையில் இன்று பெய்த திடீர் மழையால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ