spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் - அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி

பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளில் பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சேலத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

edappadi palanisamy

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என்றும்,தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக என்றும் எடப்பாடி பழனிசாமி
குறிப்பிட்டுள்ளார்.

MUST READ