Homeசெய்திகள்தமிழ்நாடு"சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

-

 

"சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

மேகதாது அணை குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார், மக்களின் வாழ்த்துக்களைப் பெறுவதில் பரபரப்பாக சுழன்றுக் கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்துக் கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும், இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழகத்தின் நலனைப் பாதிக்கும். எனவே, தமிழகத்திற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட திட்டமிடுவதை தமிழகம் அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும், விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசலாம் என்று கருதுகிறேன். சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ